Tuesday 30 October 2012

முதல் காதலன்

ஆயிரம் செல்ல பெயர்களால் அழைக்க பெற்றாலும்
குட்டிமா வை போல் எதுவும் ஈர்க்கவில்லை
சமைத்த விருந்தை ஆயிரம் பேர் புகழ்ந்தாலும்
உப்பு இல்லா ரசத்தை பிரமாதம் என்றுரைத்தது
போல் மற்றோர் சொல் எதுவும் இனிப்பதில்லை
கோனலாய் இட்ட சப்பாத்தியை வட்டம் என்று கூறியதும்
இருவது புள்ளி முடியும் வரை
மார்கழி இரவில் கால் கடுக்க நின்றதும்
தட்டு தடுமாறி சைக்கில்லில் தெருவோரம் வரை சென்ற போது
உலக கோப்பை பெற்றதுபோல் மகிழ்ந்ததும்
தான் கிலோமீட்டர் கணக்கில் நடந்தாலும்
ஆட்டோ விற்கு பணம் உள்ளதா என்று கேட்பதும்
இருபது வருடம் துளி நீர் காணாத கண்களில்
மண நாள் அன்று கொட்டும் மழையென அழுததும்
இம்மண்னுலகை விடை பெரும் நாள் வரை
எந்த குட்டிமாவாலும் மறக்க முடியாது
பிறந்த நொடி முதல் பிரியும் நொடி வரை
தன் தந்தையே முதல் காதலன்
என்பதை மறுக்க முடியாது..

No comments:

Post a Comment