சொற்களின் துணையொடு
உள்ளிருந்து வெளிவரும்
தமிழ் என்பது கண்ணாடி பெட்டிக்குள்
அடைத்து விற்கப்படும் மது அல்ல
பூக்களின் உடலுக்குள் உயிராக
சுழன்று வரும் மது
தேனீக்களாள் உரியப்படும் மதுவோ
கூட்டை அடைந்து தேனாக மாறி
பிறரை இனிப்புக்கு உள்ளாக்குகிறது
தேனீக்கள் சந்திக்காத மதுவோ
மலருக்குலேயே தங்கி விடுகிறது
தேனியன் வருகையை ஒரு மலர்
எதிர்பார்ப்பதும் இல்லை வந்தால்
ஏனென்று கேட்பதுமில்லை
என் வகையிலும்
இது பொருந்தும்
காலம் என்னும் தேனி
இந்த மலருக்கு இன்று வருகை தரலாம்
நாளை வராமலும் போகலாம்
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்....
No comments:
Post a Comment