Tuesday 6 November 2012

என்று தணியும்

படிப்பறிவு வந்ததும்
ரத்த காட்டெரியை உதறி தள்ளினோம்
இன்று Vampire பார்த்து பரவசம் அடைகிறோம்

ஹநுமரை பார்த்து இவன் மனிதனா இல்லை
விலங்கா என ஏளன படுத்தினோம்
இன்று Hulk-ஐ அப்படியே ஏற்றுக்கொண்டோம்

காத்தவாது கருப்பாவது என்று வினவினோம்
இன்று காற்றில் கருப்பே உருவமாய் பறக்கும்
Batman-ஐ பார்த்தால் புருவம் தூக்குகிறோம்

Pisa Tower-ஐ சாய்ந்து ரசிக்க தெரிந்த நமக்கு
சோழன் கொடுத்த நிலையில் பெருமிதம்
கொள்ள மறந்து போனது ஏனோ தெரியவில்லை

இன்றும் சொல்ல தோன்றுகிறது
என்று தணியும் இந்த
வெளிநாட்டவர் மீதுள்ள மோகம்..

No comments:

Post a Comment